தக்கலை அமலா கான்வென்ட்
- A.K.Perumal
- October 7, 2022
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அமலா கான்வென்டில் நடந்த புனிதர் தேவசகாயம்பிள்ளை புத்தக வெளியீட்டில் கலந்துகொண்ட நிகழ்ச்சி. நாள் 7-10 2022
Read More
வல்லன் குமாரன் விளை – கிராமியக் கலை விழா
- A.K.Perumal
- October 6, 2022
நாகர்கோவில் அருகே வல்லன் குமாரன் விளை என்ற கிராமத்தில் ஒரு நாள் முழுக்க நடந்த கிராமியக் கலை விழாவில் அ.கா.பெருமாள் பங்குகொண்ட நிகழ்ச்சி. இந்த விழா நடக்க ஏற்பாடு செய்தவர் பெருமாள். இந்த கலைவிழாவில் இருபத்தொரு கலைக் குழுவினரும் 170 கலைஞர்களும் பங்கு கொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக நாட்டார் கலைத்துறை மண்டல இயக்குனர் திரு காந்தி வந்திருந்தார்.
Read More
நாட்டுப்புறக் கலைகளின் வளமை – வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை
- A.K.Perumal
- September 22, 2022
நாட்டுப்புறக் கலைகளின் வளமை பற்றி 21-செப்-2022 அன்று வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை சார்பில் கலந்துரையாடல் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்துபோன நாட்டார் கலைகள் பற்றி அ.கா பெருமாள் விரிவாகப் பேசினார்.
Read More
தென்பாண்டி வரலாறு – திருநெல்வேலியில் நடந்த கருத்தரங்கம்
- A.K.Perumal
- September 20, 2022
தென்பாண்டி- வரலாறு தொல்லியல் பண்பாடு மையம் சார்பாக திருநெல்வேலியில் கருத்தரங்கம் நடந்தது. இதில் குமரி மாவட்ட நாட்டார் தெய்வம் தலைப்பில் அகா பெருமாள் பேசினார்.
Read More
கருங்கல் NCBH புத்தகக் கண்காட்சி
- A.K.Perumal
- September 9, 2022
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் ஊரில் NCBH புத்தகக் கண்காட்சி திறந்துவைத்தவர் நாகர்கோவில் மேயர் மகேஷ் கூட்டத் தலைமை அ.கா பெருமாள் நான் 5-10-2022 திங்கள் மாலை 6 மணி.
Read More
ஈரோடு விஷ்ணுபுரம் விழா
- A.K.Perumal
- August 26, 2022
தமிழ் அறிஞரும் தமிழ் கீர்த்தனைகள் பல எழுதியவரும் ஆகிய பெரியசாமி தூரன் பெயரில் கரசர் பத்ம பாரதிக்கு சிறந்த இனவரைவியல் நூல் எழுதியமைக்கு விருது வழங்கும் விழா ஈரோடு கவுண்டச்சிட்பாளையம் ( சென்னிமலை சாலை) ராஜ் மஹால் கல்யாண மண்டபத்தில் 14-8-2022 அன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இவ்விழாவின் காலை நிகழ்வில் (காலை 10 மணி முதல் 12.30 வரை) நாட்டார் வழக்காற்றியல் செய்தி தொடர்பான கேள்விகளுக்கு அ.கா. பெருமாள் பதில் அளித்தார். நாட்டார் வழக்காற்றில் வகைமைகளில் பதிவு […]
Read More
காலச்சுவடு கண்ணனுக்கு பாராட்டு
- A.K.Perumal
- August 26, 2022
காலச்சுவடு மாத இதழ் ஆசிரியர் இரா.சுந்தரம் என்ற கண்ணனுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே என்னும் உயர்ந்த விருதை கொடுத்து கௌரவித்துள்ளது. காலச்சுவடு பணியாளர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 4 மணிக்கு காலச்சுவடு அலுவலகம் மொட்டை மாடியில் பாராட்டுக் கூட்டம் நடத்தினர். இந்த சிறு கூட்டத்திற்கு அ.கா. பெருமாள் தலைமை தாங்கி கண்ணனை பாராட்டிப் பேசினார். பிரான்ஸ் நாட்டின் செவாயைய விருது தமிழகத்தில் இதுவரை 16 பேர்கள் பெற்று உள்ளனர் இதழாளர்கள் என்னும் வரிசையில் கண்ணன் தான் […]
Read More